×

வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் அவதி

போச்சம்பள்ளி, டிச.24: போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மார்கழி மாதத்தையொட்டி கடும்குளிர் மற்றும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்தாண்ைட காட்டிலும் இந்தாண்டு பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இரவு 10 மணிக்கு முன்னதாகவே, பனியின் தாக்கம் அதிகரித்து கடும்குளிர் வாட்டி வதைக்கிறது. அதிகாலை 4 மணிக்கு பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் நடை பயிற்சி செல்பவர்கள், முதியோர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

நேற்று வழக்கத்தை காட்டிலும் கடும் குளிர் வாட்டி எடுத்தது. மேலும், காற்றில் ஈரப்பதம் இருந்ததால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்லவே மிகுந்த சிரமப்பட்டனர். காலை 10 மணிக்கு மேல் தான் வெயில் தலைகாட்டியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

The post வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Margazhi ,Dinakaran ,
× RELATED சேதமான மேம்பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம்