×

வாக்குரிமை விழிப்புணர்வு போட்டி

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.24: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே \\”வாக்களிப்பதன் முக்கியத்துவம்” எனும் தலைப்பில் கடிதம் எழுதுதல் போட்டி நடைபெற்றது. கல்லூரியின் தேர்தல் கல்வியறிவு குழு சார்பில் நடைபெற்ற போட்டிக்கு கல்லூரியின் முதல்வர் அன்பரசி தலைமை தாங்கி பேசினார். அப்போது, தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு கடிதம் எழுதுதல் போட்டி நடைபெற்றது. இதில், அனைத்து துறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கடிதம் எழுதினர். இதையடுத்து, அனைத்து கடிதங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரியின் தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளரான உதவி பேராசிரியர் அருண்நேரு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post வாக்குரிமை விழிப்புணர்வு போட்டி appeared first on Dinakaran.

Tags : Awareness ,Pappirettipatti ,Government Arts and Science College ,Dinakaran ,
× RELATED அரியலூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி