×

வேன் மோதியதில் இன்ஜினியர் பலி

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள மப்பேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (35). இவர், சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்து, தனியாக கட்டிடங்கள் கட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று வழக்கம்போல அகரம்தென் – சேலையூர் பிரதான சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம், அவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பனி மூட்டம் காரணமாக அவர் மீது வேன் மோதியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து, வேன் ஓட்டுநர் குழந்தைசாமி (25) என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

The post வேன் மோதியதில் இன்ஜினியர் பலி appeared first on Dinakaran.

Tags : Thambaram ,Satish ,Mapedu ,Selaiyur ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கு: ரேவண்ணா ஆதரவாளர் கைது