×

கனமழை வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் கட்டணமின்றி நகல் பெறலாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் பல பகுதிகள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிப்பு அடைந்தது. 4 மாவட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. www.mycertificates.in என்ற இணையதளம் மூலம்| சான்றிதழ் நகல் பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post கனமழை வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் கட்டணமின்றி நகல் பெறலாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Higher Education Department ,Chennai ,Kanyakumari ,Nella ,Thoothukudi ,Tenkasi ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...