*அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகே ஓடையில் தனியார் மினி பஸ் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 18 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.விளாத்திகுளத்தில் இருந்து நேற்று காலை கூத்தலூரணி கிராமத்திற்கு சென்று விட்டு அங்கிருந்து 16 பயணிகள், டிரைவர் மற்றும் நடத்துனர் உட்பட 18 பேர் பயணித்த தனியார் மினி பஸ் கூத்தலூரணி- பிள்ளையார்நத்தம் சாலையில் வரும்போது ஆடுகள் சாலையில் வந்ததால் டிரைவர் பேருந்தை சாலையில் இருந்து சிறிது இடது புறமாக ஒதுக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மினி பஸ் அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்தது. ஓடையில் நீர் குறைவாக இருந்ததால் மினி பஸ்சில் பயணம் செய்த 18 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர்த்தப்பினர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விளாத்திகுளம் அருகே ஓடையில் கவிழ்ந்த மினி பஸ் appeared first on Dinakaran.