×

36வது நினைவு நாளையொட்டி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி நாளை மரியாதை

சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் 36வது ஆண்டு நினைவு நாளான 24ம் தேதி (நாளை, ஞாயிறு) காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், அதிமுக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

The post 36வது நினைவு நாளையொட்டி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி நாளை மரியாதை appeared first on Dinakaran.

Tags : 36th Memorial Day ,M. ,G. R. ,Chennai ,Adimuka Chief Corporation ,Adimuka Enterprise ,President ,MGR ,M. G. R. Memorial Day ,Dinakaran ,
× RELATED நல்லிணக்கத்தோடு திராவிட இயக்கத்தில்...