×

ஆண்டாள் கோவில் ஜெயமால்யதா யானை ஆரோக்கியமாக உள்ளது: ஆய்வுக் குழுவினர் தகவல்

திருவில்லிபுத்தூர், டிச.23: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெய மால்யதா ஆரோக்கியமாக உள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்தனர். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா. இந்த யானையை மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இயக்குனர் திலீப் குமார் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் ஆண்டாள் கோவில் யானையை ஆய்வு செய்தனர்.

யானை ஆய்வு பணியில் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப் குமார், ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, கால்நடைத்துறை உதவி இயக்குனர்கள் சுப்பிரமணியன், ராஜராஜேஸ்வரி மற்றும் அறநிலையத்துறை அதிகாரி செல்வி, திருவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் கார்த்திக் மற்றும் கால்நடை மருத்துவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆய்வு குழுவினர் பங்கேற்றனர். ஆய்விற்கு பின்னர் குழுவினர் தெரிவிக்கும்போது, ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா நல்ல உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் உள்ளது என கூறினர்.

The post ஆண்டாள் கோவில் ஜெயமால்யதா யானை ஆரோக்கியமாக உள்ளது: ஆய்வுக் குழுவினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputur ,Jaya Malyatha ,Thiruvilliputur Andala Temple ,THIRUVILLIPUTHUR ,ANDAL ,
× RELATED திருவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி...