தேனி, டிச. 23: தேனி மாவட்ட ஆதித் தமிழர் பேரவை சார்பில், தேனி மேற்கு மாவட்ட செயலாளர் மாவீரன் , போடி பாண்டி, கிழக்கு மாவட்ட தலைவர் ஈஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் நீலக்கனலன் உள்ளிட்டோர் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில், போடி நகர காவல் நிலையம் பின்புறம் போடி நகராட்சியால் கட்டப்பட்ட குழந்தைகள் பால்வாடி மையம் தற்போது இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அந்த இடத்தில் புதிய பால்வாடி கட்டித்தர வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
The post புதிய அங்கன்வாடி மையம் கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.