×

அருமனை அருகே புதிய கட்டிடத்தில் ஆண் சடலம்

அருமனை, டிச. 23: அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்தவர் மருத்துவர் மார்ட்டின் கிங். அருமனை அருகே நெடியசாலையில் இவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிட பணிகள் கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் இருந்த சிமென்ட் மூடைகளை எடுக்க பணியாளர்கள் சென்றனர்.

அப்போது முதல்தளத்தில் வித்தியாசமாக துணிகள் கிடப்பதுபோல் தெரிந்தது. பணியாளர்கள் மேலே ெசன்று பார்த்தபோது அங்கு ஒரு ஆண் சடலம் கிடந்தது. இது குறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்தபோது இறந்து 2 நாட்கள் ஆன ஆண் சடலம் கிடந்தது. அருகில் மது பாட்டில் மற்றும் சில துணிகள் கிடந்தன. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அருமனை அருகே புதிய கட்டிடத்தில் ஆண் சடலம் appeared first on Dinakaran.

Tags : Arumana ,Doctor ,Martin King ,Agastheeswaram ,Arumanai ,Nediyasalai ,Dinakaran ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...