×

கஞ்சா விற்ற ஒரிசா வாலிபர் கைது: கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

கிணத்துக்கடவு, டிச.23: கிணத்துக்கடவு பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் இருப்பதால், அவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் மேற்பார்வையில் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, கிணத்துக்கடவு பகுதிக்கு வந்த தனிப்படை போலீசார் கிருஷ்ணசாமிபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மயானத்திற்கு அருகில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை அழைத்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் விசாரித்ததில் அவர் மகேந்திரநாக் (24) ஒரிசா மாநிலம் சோன்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், ஒரிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்ற ஒரிசா வாலிபர் கைது: கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Orissa ,Kinathukadavu ,Dinakaran ,
× RELATED தெய்வச்செயல்