×

பெண் தற்கொலை

ஈரோடு, டிச. 23: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம், கணக்கம்பாளையம், குட்டையன் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (46), இவரது மனைவி தனலட்சுமி (46). இருவரும் தறிப்பட்டறை தொழிலாளிகள்.  இவர்களது மகள்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். தனலட்சுமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக மருந்தும் சாப்பிட்டு வருகிறாராம்.
இருப்பினும், அடிக்கடி ஏற்படும் வயிற்று வலியால் கடும் அவதிக்குள்ளாகும் தனலட்சுமி, வாழ்க்கையில் வெறுப்புற்று, செத்துவிடலாம் போல உள்ளது என கணவரிடம் புலம்பி வந்துள்ளார்.

கணவரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வந்த கணவனும், மனைவியும், சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளனர். மாலை 4 மணியளவில் மகேஷ்வரன் கண் விழித்து பார்த்தபோது, தனலட்சுமி, வீட்டின் மேற்கூரையில் உள்ள ஆங்கிளில் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் மகேஷ்வரன், தனலட்சுமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே தனலட்சுமி இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Maheshwaran ,Guttaiyan Kinaru, ,Kankampalayam, Chinapuram ,Perundurai, Erode district ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது