×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம்; வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு

சென்னை: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தால் எனக்கு நியாயம் கிடைக்காது.

எனவே, விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். இந்த மனு மீது முடிவெடுக்கும் வரை விழுப்புரம் அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அடுத்து வரும் நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று கூறி விசாரணையை ஜனவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம்; வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு appeared first on Dinakaran.

Tags : DGP ,Rajeshdas' ,Chennai ,Villupuram ,Rajeshdas ,Dinakaran ,
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...