×

கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை நடத்தவும், முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யும்படியும் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக முன்னாள் மாணவி புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைதாகி ஜாமின் பெற்றுள்ளார். நடனம் கற்று கொடுப்பதாக கூறி மற்றொரு நடன ஆசிரியரும் தன்னிடம் தவறாக நடந்ததாக மற்றொரு மாணவியும் போலீசில் புகார் அளித்திருந்தார்.

The post கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Kalashetra College ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள்...