×

மாயமான மனைவியால் அதிர்ந்த கணவன்: கண்முன்னே மாந்திரீகவாதியின் சித்து வேலை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மனைவியை காணவில்லை என கூறி கணவர் போலீசில் புகார் அளித்த விவகாரத்தில் மாந்திரீகவாதி ஒருவர் சிக்கி இருப்பது வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திருக்கிறது. ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் மனைவி மற்றும் தான் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் விவசாயிக்கும் அவரின் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதக கூறப்படுகிறது. இதேபோல் கடந்த 15ம் தேதியில் ஏற்பட்ட தகராறில் விவசாயி மனைவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், நாட்கள் பலகழிந்தும் அவர் விடு திரும்பாதது விவசாயியை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் தான் மனைவி மயமான விவகாரத்தில் மாந்திரீகவாதி ஒருவர் மீது தனது சந்தேகம் இருப்பதாக கூறி அவரை போலீசில் பிடித்து கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்செங்கோடு வள்ளிவளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் மாந்திரீக வாதியான இவர் கொல்லிமலை பகுதியில் மாந்திரீகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. விவசாயின் மனைவி சில உடல் பிரச்சைகளால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதற்காக தினேஷிடம் செல்போன் மூலம் தீர்வு கேட்டுவந்ததும் தெரியவருகிறது. மனைவி காணாமல் போன அன்று விவசாயின் மனைவியின் செல்போனை எடுத்துப் பார்த்தபோது மனைவி தொடர்ந்து மாந்திரீகவாதியிடம் பேசிக்கொண்டிருந்தது அறிந்து அவரை தேடி சென்றிருக்கிறார். அப்போது சம்பத்தன்று விவசாயின் மனைவி தன்னை பார்க்க வந்ததாகவும் எதுவாயினும் காலை பேசிக்கொள்ளலாம் என்று மாந்திரீகவாதி கூறியது விடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே தன்னை தேடி வந்த விவசாயி முன்பு சூடம் ஏற்றி எலுமிச்சை பழம் வைத்து மாந்திரீகம் செய்த தினேஷ் குமார் அவரின் மனைவி சுற்றுவட்டார பகுதி அருகில் இருப்பதாகவும் உடனே சென்றால் மீட்டுவிடலாம் எனவும் கூறிருக்கிறார். ஏற்கனவே மனைவியை காணவில்லை என்ற விரக்தியில் விவசாயி மந்திரவாதி மீது சந்தேகம் எழுந்து போலீசில் புகார் அளித்த நிலையில் தினேஷ்யை போலீசில் ஒப்படைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது தினேஷ் குமாரை மாந்திரீகம் தொடர்புகொண்ட அனைவரும் பெண்கள் மட்டும் என்பதை அவரின் ஜிபே பணப்பரிமாற்றம் மூலம் போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து போலீசார் அவரை துருவி துருவி விசாரணை மேற்கொண்ட போது நான் பெண்ணின் இருப்பிடத்தை கூறியபோதே சென்றிருந்தால் நீங்கள் பிடித்திருக்கலாம் எனவும் தவறுதலாக நீங்கள் என் மீது சந்தேகப்படுகிறீர்கள் என்றும் கூறிய தினேஷ் குமார் என் தலையை அடமானம் வைத்தாவது அப்பெண்ணை மீட்டு தருவதாக கூறிய வீடியோ வைரலானது.

The post மாயமான மனைவியால் அதிர்ந்த கணவன்: கண்முன்னே மாந்திரீகவாதியின் சித்து வேலை appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Jolarpet, Tirupathur district ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...