×

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை நியமித்து அரசு உத்தரவு

தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் உப்பளங்கள், வயல்வெளிகள், பிற விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள், குடிசை தொழில் புரியும் இடங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள், சொந்த தொழில் புரிபவர்கள், வர்த்தகர்கள் அனைத்து தரப்பினரும் பேரிழப்பை சந்தித்து உள்ளனர்.குறிப்பாக தூத்துக்குடி, விளாத்திகுளம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டிணம், புதுக்கோட்டை, ஆழ்வார் திருநகரி என 25க்கும் மேற்பட்ட முக்கிய பகுதிகளில் மழை வெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் நிவாரண பணிக்காக நியமனம் செய்யப்பட்ட ஐஎஎஸ் அதிகாரிகளின் விவரங்கள் பின்வருமாறு…

*தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் நியமனம்

*ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு உள்ளிட்ட பகுதிகளை ஐஏஎஸ் அதிகாரி தரேஸ் அகமது கவனிப்பார்.

*பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரிகாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆல்பி ஜான்வர்கீஸ் ஐஏஎஸ் நியமனம்.

*ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம் பகுதிகளை ஐஏஎஸ் அதிகாரி பொன்னையா கவனிப்பார்.

*ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சுற்றுவட்டார பகுதிக்கு ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் நியமனம்.

*குலசேகரநத்தம், அப்பன்திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு கிரண்குராலா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை நியமித்து அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thutukudi A. S. Government ,Thoothukudi ,Thoothukudi district ,Toothukudi ,A. S. Government ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...