×

மணவாளக்குறிச்சியில் 6 அடி நீள நல்ல பாம்பு சிக்கியது தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

குளச்சல்,டிச.22: மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (38). கூலித்தொழிலாளி. கடந்த 2 வருடமாக அருகில் உள்ள பிள்ளையார்கோவில் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது 6 ம் வகுப்பு படிக்கும் மகன் வழக்கம்போல் நேற்றுமுன்தினம் மாலை அந்த பகுதியில் டியூஷன் சென்றுவிட்டு இரவு சுமார் 7.30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டு காம்பவுண்டுக்குள் செல்லும்போது வீட்டின் நடை வாசலின் குறுக்கே சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. பின்னர் அது காம்பவுண்டு அஸ்திவாரம் சுவருக்குள் பதுங்கி கொண்டது. உடனே இது குறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகர் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன் பிறகு பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post மணவாளக்குறிச்சியில் 6 அடி நீள நல்ல பாம்பு சிக்கியது தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Manavalakurichi ,Kulachal ,Ramesh ,Cheramangalam ,Pillaiarkovil ,Dinakaran ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது