×

வாகனங்களில் ஒளிரும் லைட்டுகளால் விபத்து

 

தேவாரம், டிச. 22: தேவாரம், கோம்பை, போடி, கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட ஊர்களில் அதிகமான வாகன விபத்துக்கள் நடக்கிறது. இரவு நேரங்களில், தனியார் ஆம்னி, லாரி, கார்கள், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் அதிக மின் ஒளி தரக்கூடிய பல்பினை பொருத்தி இயக்குவதால் விபத்துக்கள் அதிக அளவில் நடக்கிறது. ‘பளபள’ சாலையில் வேகம் அறிந்த ஓட்டுனர்கள் பலர், விதிமுறைகளை அறியாதது வேதனையே. இதனால் அவர்களும், அவர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத, அதே வழியில் வரும் பிற வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர்.

மாவட்டத்தில் சிலர் விதிமுறைகளை கடைபிடிக்காததாலும், வேகக்கட்டுப்பாடு உத்தரவை முறையாக செயல்படுத்தாததாலும் விபத்துகள்அதிகரித்து கொண்டே இருக்கிறது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதி வேகத்தில் செல்லும் தனியார் பஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வேகக்கட்டுப்பாட்டு கருவியால் ஏற்படும் பலன்கள் குறித்து போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். ஒளிரும் லைட்டுகளை தடுக்க வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். வாகனத்தின் முன்புறம், கருப்பு ஸ்டிக்கர்களைஒட்டி விபத்துக்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வாகனங்களில் ஒளிரும் லைட்டுகளால் விபத்து appeared first on Dinakaran.

Tags : Devaram ,Gompai ,Bodi ,Kampam ,Uthampalayam ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...