×

பேராவூரணி பகுதியில் வீடுகளில் புகுந்து திருடிய முகமூடி கொள்ளையன் கைது

பேராவூரணி, டிச.22: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக வீடு புகுந்து திருடிய முகமூடி கொள்ளையன் கைது செய்யப்பட்டார். பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் காவல்சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து திருட்டுகள் நடைபெற்று வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பட்டுக்கோட்டை , பேராவூரணி, சேதுபாவாசத்திரம் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிரிதிவிராஜ் சவுகான் உத்தரவின்பேரில், பேராவூரணி இன்ஸ்பெக்டர் காவேரி சங்கர் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மரக்காவலசை பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது சேலத்தில் வசித்து வருபவருமான ஜெயசூர்யா (35) எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பேராவூரணி என்.எஸ்.என் டவர் பகுதியில் வசித்து வரும் பவித்ரா, பேராவூரணி மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் நீலாவதி, பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோட்டாகுடி பகுதியில் வசித்து வரும் செல்லையன், சேதுபாவாசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டினம் பகுதியில் வசித்து வரும் வெண்ணிலா ஆகியோர்களது வீடுகளில் முகமூடி அணிந்து, இரவு நேரங்களில் வீடு புகுந்து தங்க நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் செல்போன்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து சுமார் 10 பவுன் தங்க நகை, செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post பேராவூரணி பகுதியில் வீடுகளில் புகுந்து திருடிய முகமூடி கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Peravoorani ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED பேராவூரணி நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்ட இடம்