×

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை எம்.கே.பி. நகரை சேர்ந்த தம்பதியரின் 5 வயது சிறுமிக்கு வியாசர்பாடியை சேர்ந்த 58 வயதான வேலாயுதம் என்பவர் கடந்த 2020ல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். வேலாயுதத்தை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் வேலாயுதத்திற்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ. 6,000 அபராதம், அந்த தொகையையும், அரசு சார்பில் ரூ.2 லட்சமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

The post சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Velayutham ,Vyasarpadi ,
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது