×

கை நரம்பை வெட்டி வாலிபர் தற்கொலை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில் வெள்ளை அணுக்கள் குறைபாட்டில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர், கை நரம்பை வெட்டி தற்கொலை செய்து கொண்டார். கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (27). கட்டிட தொழிலாளியான இவர் உடலில் வெள்ளை அணுக்கள் குறைபாடு தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நோய் குணமாகாததால் மனமுடைந்த அவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் தனது கை மணிக்கட்டில் நரம்பை வெட்டிக்கொண்டார். அப்போது ரத்தம் சொட்டியபடியே அவர் வீட்டு மாடியில் சுற்றி திரிந்துள்ளார். இதில் ரத்தப்போக்கு அதிகமானதை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாணிக்கத்தை அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கை நரம்பை வெட்டி வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Madambakkam ,Kuduvancheri ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...