×

இரும்பு கடையில் திருடியவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சாந்திநகர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் மணிகண்டன் (33). இவர் வழக்கம் போல் நேற்று காலை கடையை திறந்து இரவில் பூட்டி விட்டு வீட்டிற்க்குச் சென்றுள்ளார். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் அவரது இரும்புக் கடைக்குள் புகுந்து பழைய பொருட்களை திருடியுள்ளார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து, அடித்து உதைத்து அவரை செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பீகாரைச் சேர்ந்த மனோஜ்தாஸ் என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post இரும்பு கடையில் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Manikandan ,Shantinagar ,Dinakaran ,
× RELATED முறையான பராமரிப்பு இன்றி...