×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ1,900


அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. வருகின்ற 23ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 1,900க்கும் கனகாம்பரம் ஐஸ் மல்லி ஆகியவை 1,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முல்லை, ஜாதிமல்லி 1,000க்கும் அரளி பூ 250க்கும் சாமந்தி மற்றும் பன்னீர் ரோஸ் 120க்கும் சம்பங்கி 150க்கும் சாக்லேட் ரோஸ் 140க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மீண்டும் நாளைஅனைத்து பூக்களின் விலை உயரும்’ என்றார்.

The post வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ1,900 appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi ,Annanagar ,Koyambedu ,Vaikunda ,Ekadasi ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...