×

நோய் பரவும் அபாயம் உள்ளதால் கொதிக்கவைத்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்துக : பொது சுகாதாரத்துறை

சென்னை : வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பருகும்படி பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம்
உள்ளதால் கொதிக்கவைத்து ஆற வைத்த அல்லது குளோரினேசன் செய்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகளை ப்ளீச்சிங் பவுடரால் சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

The post நோய் பரவும் அபாயம் உள்ளதால் கொதிக்கவைத்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்துக : பொது சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Tags : Department of Public Health ,Chennai ,Public Health Department ,
× RELATED பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை...