×

பலாத்கார முயற்சியில் இளம்பெண் கொலை: வாலிபர் கைது


தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி முத்து மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் மாரியம்மாள். இவரது மகள் மகாலட்சுமியுடன் (22) புளியங்குடியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிறு அன்று இரவு வேலை முடிந்து மகாலட்சுமி வீடு திரும்பாததால் மாரியம்மாள் உறவினர் வீடுகளில் எல்லாம் தேடினார். அவரது செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், சிந்தாமணியில் மாரியப்பன்(42) என்பவரது தோட்டத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாண நிலையில் கிடப்பது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அருகில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் மாரியம்மாள் மகள் மகாலட்சுமி என்பது தெரியவந்தது.

மேலும் சம்பவத்தன்று (ஞாயிறு) இரவு மகாலட்சுமி, வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மகாலட்சுமியை ஒரு நபர் பின்தொடர்ந்து செல்வது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது. இதையடுத்து மகாலட்சுமியை பின்தொடர்ந்த கருப்பசாமி (35) என்பவரை ேபாலீசார் பிடித்து விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கருப்பசாமி, ஞாயிறு இரவு மது போதையில் இருந்துள்ளார். அப்போது மகாலட்சுமி வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் அவரை வழி மறித்து உறவுக்கு அழைத்துள்ளார். அவர் மறுத்ததால் வயலில் உள்ள நீரில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து போலீசார் கருப்பசாமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பலாத்கார முயற்சியில் இளம்பெண் கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Mariammal ,Chintamani Muthu Mariamman Kovil Street, Puliangudi, Tenkasi district ,Mahalakshmi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...