புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் உண்மை கண்டறியும் வழக்கு ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விசாரணை அதிகாரி மருத்துவ விடுப்பில் உள்ளதால் அவகாசம் கோரப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது தொடர்பான வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேங்கைவயல், இறையூரைச் சேர்ந்த 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
The post புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் உண்மை கண்டறியும் வழக்கு ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.