×

இஸ்ரேல் – பாலஸ்தீன போர்: காசாவில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியது; ஹமாஸ் அமைப்பு தகவல்

காசா: பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் 2 மாதங்களை கடந்து நீடித்துவருகிறது. சர்வதேச நாடுகளின் முயற்சியால் காசாவில் 7 நாட்களுக்கு போர் நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் காசா மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

தப்போது முதல் தெற்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மிகவும் ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்கு இஸ்ரேல் போர் விமானங்கள் இரவு, பகல் பாராமல் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இந்த சூழலில் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசியது. இதில் அந்த குடியிருப்பு தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் 2 வாரங்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை, அந்த குழந்தையின் 2 வயது அண்ணன் உள்பட 27 பேர் பலியாகினர். மேலும் அந்த குழந்தைகளின் தாய், தந்தை மற்றும் பாட்டி உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் உக்கிரமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளதாகவும், அதில் 8,000 குழந்தைகள் மற்றும் 6,200 பெண்கள் அடங்குவர் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post இஸ்ரேல் – பாலஸ்தீன போர்: காசாவில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியது; ஹமாஸ் அமைப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Israel—Palestinian war ,Gaza ,Hamas ,Gaza, Palestine ,Israel ,Israel-Palestine ,Dinakaran ,
× RELATED காசாவின் தெற்கு பகுதியான ரஃபா மீது...