×

பெண்ணை விபசாரத்திற்கு அழைத்த தொழிலாளி கைது

தர்மபுரி, டிச.21: கோவை தோப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி(43). இவர் தர்மபுரி பிடமனேரி மாரியம்மன் கோயில் அருகே தங்கியிருந்து, கூலி வேலை செய்து வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம், தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வீராசாமி சென்றார். அப்போது, அங்கு தனியாக நின்ற பெண்ணிடம், நீ அழகாக இருக்கிறாய், பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நாள் ஒன்றுக்கு ₹1000 முதல் ₹2000 வரை சம்பாதிக்கலாம், வருகிறாயா? என அழைத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ விஜயசங்கர் வழக்குப்பதிவு செய்து, வீராசாமியை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post பெண்ணை விபசாரத்திற்கு அழைத்த தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Veerasamy ,Thoppampatti ,Coimbatore ,Pidhamaneri Mariamman ,Temple ,
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்