×

குருத்துக்கொல்லி பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை

கூடலூர், டிச.21: தேவர் சோலை பேரூராட்சி உட்பட்ட குருத்துகொல்லி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் 1.100 கிலோ மீட்டர் தூரம் உள்ள மண்சாலை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2009ம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் தார்ச்சாலையாக மாற்றப்பட்டது. அதன்பின் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பராமரிப்பின்றி தார்ச்சாலை முழுவதும் பெயர்ந்து வாகன போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளது. அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குருத்துக்கொல்லி பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kurthukolli ,Kudalur ,Kuruthukolli ,Devar Cholai ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்