×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஜல்லிகட்டு போட்டிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது மதுரை மாவட்டம். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றது. இதில் அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியை தென்கால் பாசன விவசாயிகள் சங்க நிவாகிகள் நடத்தி வந்தனர்.

அவ்வாறு நடத்த கூடிய ஜல்லிகட்டு போட்டியில் ஜாதிமத மோதல்காள் உள்ளது. எனவே இந்த போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிகட்டு போட்டியில் ஜாதி, மதத்தை புகுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. எனவே இந்த போட்டிகளை மதுரை மாவட்ட நிர்வாகமே இனி எடுத்து நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Icourt Branch ,Avanyapuram Jallikatu Competition ,Madurai District Administration ,Madurai Municipality ,Madurai ,Jallikatu ,AVANIAPURAM ,PALAMEDU ,ALANGANALLUR JALLIKATTU ,MADURAI DISTRICT ,Avanyapuram Jallikatu ,Dinakaran ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...