×

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய பாலம் கட்டும் பணி பொங்கலுக்கு பிறகு தொடங்கும்

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய பாலம் கட்டும் பணி பொங்கலுக்கு பிறகு தொடங்கும் என்று தகவல் தெரிவித்துள்ளனர். மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்துதல் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புதிய மேம்பாலம் கட்டப்பட்டால் நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவித்துள்ளனர். ரூ.82 கோடியில் கட்டப்பட உள்ள மேம்பாலத்தின் கட்டுமான பணி ஜனவரியில் தொடங்கி 18 மாதத்தில் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய பாலம் கட்டும் பணி பொங்கலுக்கு பிறகு தொடங்கும் appeared first on Dinakaran.

Tags : Valluvar Kottam ,Chennai ,Pongal ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...