×

மார்த்தாண்டம் மீன் சந்தையில் வியாபாரி மீது தாக்குதல்

மார்த்தாண்டம், டிச.20: மார்த்தாண்டம் ஆர்சி தெருவை சேர்ந்தவர் இனிகோ (47). மார்த்தாண்டம் மீன் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். அங்கு முளங்குழி பகுதியை சேர்ந்த ஜெனிஸ் (38) என்பவரும் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இருவருக்கும் இடையே மீன் விற்பனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மதியம் மீண்டும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த ஜெனிஸ், இனிகோவை தாக்கியதக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த இனிகோ அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து இனிகோ அளித்த புகாரின்பேரில் ஜெனிஸ் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மார்த்தாண்டம் மீன் சந்தையில் வியாபாரி மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Marthandam fish market ,Marthandam ,Inigo ,RC Street, Marthandam ,market.… ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...