×

மோர்பி பால விபத்தில் 135 பேர் பலி ஒரேவா நிறுவன இயக்குநர் ஜெய்சுக் படேல் ஜாமீன் தள்ளுபடி: குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் ஓடும் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் கடந்த அக்டோபர் 30ம் தேதி அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த 135 பேர் மச்சு ஆற்றில் விழுந்து பலியாகினர். இந்த வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டு சிறயைில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான விசாரணையில் ஒரேவா நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெய்சுக் படேல் 10வது குற்றவாளியாக கடந்த ஜனவரி மாதம் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து அவர் சரணடைந்த நிலையில் ஜெய்சுக் படேல் கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி திவ்யேஷ் ஜோஷி நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post மோர்பி பால விபத்தில் 135 பேர் பலி ஒரேவா நிறுவன இயக்குநர் ஜெய்சுக் படேல் ஜாமீன் தள்ளுபடி: குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Morbi bridge accident ,Jayshuk Patel ,Gujarat High Court ,AHMEDABAD ,Machu river ,Morbi district ,Gujarat ,Morbi bridge ,Oreva ,Dinakaran ,
× RELATED நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2...