சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: பெரியாரின் தொண்டராக, அண்ணாவின் தம்பியாக கலைஞரின் தமையனாக, திமுகவின் தத்துவத் தலைமையாக, தன் வாழ்நாள் முழுவதும் அப்பழுக்கற்ற கொள்கைக் கோபுரமாக உயர்ந்து நின்ற பேராசிரியர் பிறந்த நாளான நேற்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்திற்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் மலர்தூவி மரியாதை செய்தார். அதுபோது, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன், பகுதிச் செயலாளர் ஆயிரம்விளக்கு மா.பா.அன்புதுரை, இலக்கிய அணி இணைச் செயலாளர் ஈரோடு இறைவன், வட்டச் செயலாளர் ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
The post அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் படத்திற்கு துரைமுருகன் மரியாதை appeared first on Dinakaran.