×

கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளிபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (48). ஆதரவற்ற கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஊரப்பாக்கம் மற்றும் காரணைப்புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் தங்கி அவ்வப்போது பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை காரணைப்புதுச்சேரியில் பால்ராஜ் ரத்த வாந்தி எடுத்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். தகவல் அறிந்ததும் ஊரப்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி ஆதரவற்ற, கட்டிட தொழிலாளியான பால்ராஜியின் உடலை தனது சொந்த செலவில், காரணைப்புதுச்சேரி சுடுகாட்டில் நேற்று மாலை அடக்கம் செய்தார்.

The post கட்டிட தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Balraj ,Vallipuram, Tirunelveli district ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...