×

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் சமூக தரவு பதிவு நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மீதமுள்ள 33 மாவட்டங்களில் நவம்பர் மாதம் 29ம் தேதி முதல் சமூக தரவு பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இக்கணக்கெடுப்பில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கக களப்பணியாளர்களும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும் தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்வார்கள். அதன்படி, கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படும். இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும், தங்களின் தகவல்களை சமூக தரவு பதிவு என்ற கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி வழங்கமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram District ,Collector ,Kalachelvi Mohan ,Tamil Nadu ,
× RELATED கோடை வெப்பத்தில் இருந்து வாகன...