×

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதவியில் நீடிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கோ வாரண்டோ வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை பிப்.22-க்கு ஒத்திவைத்தது.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Election Commission ,Chennai ,Go Warrant ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்