×

மாமல்லபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்கள் சிரமம்


மாமல்லபுரம்: மாமல்லபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். போதிய ஊழியர்களை நியமிக்கவேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரம் கிழக்கு ராஜவீதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 3 மாதமாக மேலாளர் இல்லை. ஏற்கனவே, இங்கு 16 ஊழியர்கள் பணியாற்றினர். தற்போது 5 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். பணிசுமை காரணமாக ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பண பரிவர்த்தனை, பயிர்க்கடன், கறவை மாட்டுக்கடன், முத்ரா கடன், கல்விக் கடன் போன்றவை பெற வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் கால் கடுக்க வங்கியில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாய்தகராறு ஏற்படுகிறது. சில நேரங்களில் கைகலப்பாக மாறுகிறது. எனவே, இந்த பிரச்னையில் சம் பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மேலாளர் மற்றும் கூடுதல் ஊழியர்களை நியமித்து வாடிக்கையாளர்களின் சிரமத்தை போக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்கள் சிரமம் appeared first on Dinakaran.

Tags : Indian Overseas Bank ,Mamallapuram ,Dinakaran ,
× RELATED ரூ.2.14 கோடி மோசடி ஐஓபி வங்கி மேலாளருக்கு...