×

கம்பம் அருகே 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

கூடலூர், டிச. 19: கம்பம் அருகே தனியார் தோட்டத்தில் இருந்த சுமார் 7 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில், அதிக அளவில் தோட்டம், வயல்வெளிகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றித்திரிந்த மலைப்பாம்பு ஒன்றை தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சென்று பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சாமண்டிபுரம் நுழைவாயில் பகுதி அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்ட பகுதிக்குள் புகுந்த மலைப் பாம்பை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், உயிருடன் பிடித்து அதனை தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை வனத்துறையினர் கம்பம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

The post கம்பம் அருகே 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Koodalur ,Dinakaran ,
× RELATED நகராட்சி அதிகாரிகள் அதிரடி கூடலூர்...