×

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வாலிபருக்கு 23 ஆண்டு சிறை: திண்டுக்கல் மகளிர் கோர்ட் தீர்ப்பு

 

திண்டுக்கல், டிச. 19: பழநி பகுதியை சேர்ந்தவர் காந்தி ராஜன் (23). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022ம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரில் பழநி அடிவாரம் போலீசார் காந்திராஜன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சரண் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் காந்திராஜனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வாலிபருக்கு 23 ஆண்டு சிறை: திண்டுக்கல் மகளிர் கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul Women's Court ,Dindigul ,Gandhi Rajan ,Palani ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...