×

ஸ்டான்லி மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னா (30). தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், நோய் தீவிரம் அடைந்ததையடுத்து கடந்த மாதம் 23ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 1ம் தேதி தொண்டை பகுதியில் அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சின்னாவுக்கு தொண்டையில் வலி அதிகமாக இருந்து வந்தது.

இந்தநிலையில் வலியை தாங்க முடியாத அவர், நேற்று அதிகாலை மருத்துவமனையின் புதிய கட்டிடம், எஸ்எஸ்பி பிளாக், 4வது மாடிக்கு சென்று, அங்கியிருந்து கீழே குதித்துவிட்டார். இதில் தொண்டை மற்றும் கழுத்து பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சின்னா உயிரிழந்தார். தகவலறிந்த ஸ்டான்லி மருத்துவமனை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post ஸ்டான்லி மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Stanley Hospital ,Thiruvottiyur Behanayamman Koil Street ,
× RELATED மணலி நெடுஞ்சாலையில் நேற்று மாநகர...