×

கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று திருவனந்தபுரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கையின் தென்பகுதிக்கு அருகே ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கேரளாவில் நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 3 நாட்களுக்கு லட்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

The post கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...