×

நாட்டுக்கும், நாடாளுமன்றத்துக்கும் சிறந்த பாதுகாப்பு வழங்கவேண்டும்: டிடிவி.தினகரன்

மதுரை: மதுரை மற்றும் நெல்லை மண்டல அமமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கூட்டணி குறித்து டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரியிலோ முடிவாகும். பன்னீர்செல்வம் எங்களோடு பணியாற்றி வருகிறார். தேமுதிக பொதுச் செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்.

கடல்நீரில் கலந்த எண்ணெய் கழிவுகளை உரிய உபகரணங்கள் கொண்டு அகற்ற வேண்டும். நாட்டுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒன்றிய அரசு சிறந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். தலைமைச் செயலாளர் அறிக்கைப்படி சென்னையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் சகஜ சூழ்நிலைக்கு திரும்பி விட்டது. மற்ற ஏரியாக்களிலும் திரும்பிவிடும் என கூறியிருக்கிறார். அதன்படி நடக்கும் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

The post நாட்டுக்கும், நாடாளுமன்றத்துக்கும் சிறந்த பாதுகாப்பு வழங்கவேண்டும்: டிடிவி.தினகரன் appeared first on Dinakaran.

Tags : Parliament ,DTV.Thinakaran. ,Madurai ,Nellai Mandal ,AAMUK ,TTV ,Dinakaran ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...