×

ஜனவரி 22ல் ராமர் கோயில் குடமுழுக்கு விழா நெரிசலை தவிர்க்க அயோத்திக்கு வர வேண்டாம்: கோயில் நிர்வாகம் திடீர் அறிவிப்பு

லக்னோ: கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் அடுத்த மாதம் 22ம் தேதி அயோத்திக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 22ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க அடுத்த மாதம் 22ம் தேதி பொதுமக்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அயோத்தி ராமர் கோயில் கருவறை தயாராக உள்ளது. சிலை தயாராக உள்ளது. ஆனால் கோயிலில் நிறைய வேலைகள் நிலுவையில் உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டுமானப் பணிகள் தொடரலாம். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ராமர் கோயில் திறப்புக்குச் செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.

அயோத்தி நகரத்தில் நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 22ம் தேதி மக்கள் அயோத்திக்கு புறப்பட்டு வர வேண்டாம். உங்களுக்கு அருகில் உள்ள சிறிய அல்லது பெரிய கோயிலில் ஒன்று கூடுங்கள். வேறு கடவுள் அல்லது தெய்வத்திற்கு உரியதாக இருந்தாலும், உங்களால் இயன்ற கோயிலுக்குச் செல்லுங்கள்’ என்றார்.

The post ஜனவரி 22ல் ராமர் கோயில் குடமுழுக்கு விழா நெரிசலை தவிர்க்க அயோத்திக்கு வர வேண்டாம்: கோயில் நிர்வாகம் திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ayoti ,Ramar Temple Umbrella ,Temple ,Lucknow ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்