டெல்லி: குவைத் மன்னர் மறைவை ஒட்டி, இன்று நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் கடைப்பிடிப்பு என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமது மறைவை ஒட்டி இன்று அரசு கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது எனவும் தேசிய கொடி பறக்கவிடப்படும் கட்டிடங்களில், நாடு முழுவதும் இன்று ஒருநாள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
The post குவைத் மன்னர் மறைவை ஒட்டி, இன்று நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் கடைப்பிடிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.