×

புதிய கட்டிடங்கள் கட்டுமான பணியை எம்எல்ஏ ஆய்வு

திருச்செங்கோடு, டிச.17: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுமான பணியை ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வு செய்து பார்வையிட்டார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். 5 மாடி கட்டிட கட்டுமான பணிகளை 1 வருடத்திற்குள் முடிக்குமாறும், பணிகள் தரமாக இருக்க வேண்டும் என எம்எல்ஏ ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, சித்தா மருத்துவமனை பிரிவுக்கு சென்று நோயாளிகளிடம் சிகிச்சை முறையாக தரப்படுகிறதா என விசாரித்தார். பதிவேட்டில் உள்ள மருந்துகளின் எண்ணிக்கைக்கும் இருப்பில் உள்ளதற்கும் இருந்த வேறுபாட்டை சுட்டிக்காட்டிய ஈஸ்வரன் முறையாக ஆவணங்களை பராமரிக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் அறிவுசார் மையம், தோக்கவாடி சாலைப்பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து எலச்சிபாளையம் ஒன்றியம் 85 கவுண்டம்பாளையத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கொமதேக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், ஒன்றிய செயலாளர் கார்த்தி, திமுக ஒன்றிய செயலாளர் செல்வராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post புதிய கட்டிடங்கள் கட்டுமான பணியை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MLA ,Thiruchengode ,Iswaran ,Tiruchengode Government Hospital ,Tiruchengode ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...