×

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.17: பொம்மிடி அருகே உள்ள ஜங்காலப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்கன்(45). கூலி தொழிலாளியான இவரும், உறவினரான முருகன் என்பவரும் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றனர்.  அப்போது, மூக்கன் அவரது விவசாய கிணற்றில் நிலை தடுமாறி விழுந்தார். இதனை அறிந்த உறவினர்கள் கிணற்றில் குதித்து அவரை மீட்டனர். பின்னர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Papriprettipatti ,Mookan ,Jangalapatti ,Pommidi ,Murugan ,
× RELATED தனியார் வெடி மருந்து கிடங்குகளில் ஆர்டிஓ ஆய்வு