×

விவாகரத்து பெற்ற நிலையில் குடும்பத்தினர் தாக்கியதில் சீரியல் நடிகை படுகாயம்: மும்பை போலீசிடம் கதறல்

மும்பை: மும்பையில் டிவி நடிகை வைஷ்ணவி தன்ராஜை, அவரது குடும்பத்தினர் தாக்கியதால் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தன்ராஜ், படுகாயமடைந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கிளிப்பில் தனது குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். தனது குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் தான் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார். அவரது முகத்தில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களை காட்டினார்.

முகம் மட்டுமின்றி, அவரது கைகளிலும் ஏற்பட்ட காயங்களையும் கேமரா முன் காட்டுகிறார். மேலும் தனக்கு எவராவது உதவுங்கள் என்று கோருகிறார். இந்த வீடியோவை மும்பையில் உள்ள காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு எடுத்துள்ளார். மேலும் அவரது பதிவில், ‘எனக்கு இப்போது உதவி தேவை. தற்போது நான் காஷிமிரா காவல் நிலையத்தில் உள்ளேன், எனது குடும்பத்தினரால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டேன். ஊடகங்கள், செய்தி சேனல்கள், திரைத்துறையினர் எனக்கு உதவுங்கள்’ என்று கூறியுள்ளார்.

நடிகை வைஷ்ணவி தன்ராஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து மும்பை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த 2016ம் ஆண்டில் நடிகர் நிதின் ஷெராவத்தை திருமணம் செய்த பின்னர், அவரது குடும்பத்தினரால் வைஷ்ணவி தன்ராஜ் தாக்கப்பட்டார். அதனால் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். தற்போது அவரது சொந்த குடும்பத்தினரால் தாக்கப்பட்டதாக வைஷ்ணவி தன்ராஜ் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post விவாகரத்து பெற்ற நிலையில் குடும்பத்தினர் தாக்கியதில் சீரியல் நடிகை படுகாயம்: மும்பை போலீசிடம் கதறல் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Vaishnavi Dhanraj ,
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...