×

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் பயன்பாட்டிற்கு திறப்பு

பேராவூரணி, டிச.16: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ அசோக்குமார் நேற்று தொடங்கி வைத்தார். பேராவூரணி ஒன்றியம் கல்லூரணிக்காடு ஊராட்சியில் ரூ.9 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட பொது வினியோக அங்காடி கட்டிடத்தை கூட்டுறவு சார்பதிவாளர்கள் அறிவழகன், பாலசுந்தர் ஆகியோர் முன்னிலையில் எம்எல்ஏ அசோக்குமார் திறந்து வைத்தார்.
தொடர்ந்து சேதுபாவாசத்திரம் ஒன்றியம், புக்கரம்பை ஊராட்சி, மேற்குடிக்காடு கிராமத்தில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ரூ.6.70 லட்சத்திலும், ஆழ்துளைக் கிணறு ரூ.4.25 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

தொடர்ந்து சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மேல பூவாணம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடப் பணி, புக்கரம்பை, பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய புதிய சமையல் கூடங்களை எம்எல்ஏ அசோக்குமார் திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சிகளில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அலிவலம் மூர்த்தி, சுவாதி காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, சடையப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவதாஸ், வீரத்தமிழன், சுந்தர்ராஜ், காளிமுத்து, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல்மஜீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் பயன்பாட்டிற்கு திறப்பு appeared first on Dinakaran.

Tags : Peravoorani ,Sethubavasatram ,MLA ,Ashokumar ,Setupavasatram ,
× RELATED பேராவூரணி நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்ட இடம்