- பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி
- பெரம்பலூர்
- தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம்
- பெரம்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளி
- தின மலர்
பெரம்பலூர்,டிச.16: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் துறைத்தேர்வுகளை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) முனியநாதன் (ஓய்வு) நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் விளக்கவகை தேர்வுகள் கணினி அடிப்படையிலான தேர்வுகள் என இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது.
விளக்க வகை தேர்வுகள் கடந்த 12ம்தேதி முதல் நேற்று 15ம்தேதி வரை பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கணிணி அடிப்படையிலான தேர்வுகள் கடந்த 9 ம்தேதி முதல் வருகிற 17ம்தேதி வரை தண்ணீர்ப் பந்தல் அருகேயுள்ள ரோவர் பொறியியல் கல்லூரியிலும் தேர்வுகள் நடைபெறுகிறது. விளக்க வகை தேர்வெழுத 592 நபர்களும், கணினி அடிப்படையிலான தேர்வெழுத 574 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
The post பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் துறைத்தேர்வு appeared first on Dinakaran.