×

கரூர் ஏமூர் பகுதியில் மந்தமாக நடைபெறும் வடிகால் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

கரூர், டிச. 16: கரூர் மாவட்டம் ஏமூர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் ஏமூர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த ஏமூரின் சில பகுதிகளில் வடிகால் வசதி இல்லை என்பதால் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனடிப்படையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக குடியிருப்புவாசிகள் எளிதாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். எனவே அனைவரின் நலன் கருதி வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் நடைபெறும் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கரூர் ஏமூர் பகுதியில் மந்தமாக நடைபெறும் வடிகால் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur Emur ,Karur ,Emur ,Dinakaran ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...